TamilSaaga

சுற்றுலாப் பிரியர்களுக்கு மகிழ்ச்சி: சிங்கப்பூரில் ஆசியாவின் முதல் சாகச வனவிலங்குப் பூங்கா திறப்பு!

சிங்கப்பூரின் ஐந்தாவது வனவிலங்குப் பூங்காவான ரெயின்ஃபோரஸ்ட் வைல்ட் ஏசியா (Rainforest Wild Asia) இன்று அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டுள்ளது. மண்டாய் வனவிலங்குப் பூங்காக்களின் குழுமத்தின் ஒரு பகுதியாக, ரெயின்ஃபோரஸ்ட் வைல்ட் ஏசியா ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்கும். இந்த பூங்காவில் ஆசியாவின் பல்வேறு மழைக்காடுகளில் காணப்படும் விலங்குகள் மற்றும் தாவரங்களை நீங்கள் காணலாம். மேலும், இங்கு பல்வேறு சாகச நடவடிக்கைகள் மற்றும் கல்வி நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இது அனைத்து வயதினருக்கும் ஒரு அற்புதமான அனுபவமாக இருக்கும்.

சிங்கப்பூரில் உள்ள மற்ற வனவிலங்குப் பூங்காக்களுடன் சேர்ந்து, ரெயின்ஃபோரஸ்ட் வைல்ட் ஏசியா ஒரு உலகத் தரம் வாய்ந்த வனவிலங்குப் பூங்கா. Rainforest Wild Asia தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பூங்கா திறந்திருக்கும். பூங்காவில் 36 வகை விலங்குகளைக் காணலாம். சிங்கப்பூரின் புதிய வனவிலங்குப் பூங்காவில் இதுவரை சிங்கப்பூரில் பார்க்காத அரிய பிரான்சுவா லங்குர் குரங்குகள் மற்றும் பிலிப்பைன்ஸ் புள்ளிமான்கள் உள்ளன. இது ஆசியாவிலேயே சாகச அம்சங்களுடன் கூடிய முதல் வனவிலங்குப் பூங்காவாக கருதப்படுகிறது. இது இயற்கையையும் விலங்குகளையும் நேசிக்கும் அனைவருக்கும் ஒரு திகட்டாத அனுபவமாக இருக்கும்.

கட்டணம்:
பெரியவர்கள் -$43
பிள்ளைகள் – $31
மூத்தோர் – $20

இம்மாத இறுதி வரை உள்ளூர்வாசிகளுக்கு 10 வெள்ளி தள்ளுபடி உண்டு.

Location: 20 Mandai Lake Rd, Singapore 729825

இந்த பூங்காவைப் பார்வையிட நீங்கள் ஆர்வமாக இருந்தால், மேலும் தகவல்களுக்கு மண்டாய் வனவிலங்குப் பூங்காக்களின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடலாம்.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

Related posts