மீசில்ஸ் (Measles) – ஒரு தொற்றக்கூடிய நோய்
மீசில்ஸ் (தட்டம்மை என்றும் சொல்வார்கள்) என்பது ஒரு வைரஸ் கிருமியால் வரும் நோய். இது மிகவும் வேகமாக பரவும் தன்மையுள்ளது.
எப்படி பரவுகிறது? இது காற்றின் மூலம் எளிதாகப் பரவுகிறது. அதாவது, மீசில்ஸ் உள்ள ஒருவர் தும்மும்போது, இருமும்போது அல்லது பேசும்போது, வாயிலிருந்து வெளிவரும் சிறு நீர்த்திவலைகள் மூலம் மற்றவர்களுக்கு இந்த நோய் பரவும்.
யாரை அதிகம் தாக்கும்? இந்த நோய் குறிப்பாக குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது. ஆனால், மீசில்ஸ் தடுப்பூசி போடாத பெரியவர்களுக்கும் இது வரலாம்.
-
யார் தடுப்பூசி பெற வேண்டும்?
-
7 வயதுக்குட்பட்ட, முழுமையாக தடுப்பூசி பெறாத குழந்தைகள் உள்ள குடும்பங்களில் பணிபுரியும் பணிப்பெண்கள்.
-
தடுப்பூசி பெறாதவர்கள் அல்லது மீசில்ஸ் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள்.
-
-
தடுப்பூசி தேவையில்லாதவர்கள்
-
ஏற்கனவே மீசில்ஸ் நோய் தாக்கி, நோய் எதிர்ப்பு சக்தி பெற்றவர்கள்.
-
குடும்பத்தில் உள்ள 7 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் முழுமையாக தடுப்பூசி பெற்றிருந்தால்.
-
-
முதலாளிகள் (Employers) கவனத்திற்கு:
உங்கள் வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்ணுக்கு (Domestic Worker) மீசில்ஸ் (Measles) நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்தும் ஆவணங்களை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த ஆவணங்கள் என்னென்னவாக இருக்கலாம்?
- தடுப்பூசி சான்றிதழ்: பணிப்பெண் மீசில்ஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழ்.
- செராலஜி பரிசோதனை முடிவு (Serology Test Result): ரத்தப் பரிசோதனை மூலம் மீசில்ஸ் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதைக் காட்டும் அறிக்கை.
- முந்தைய நோய்த்தொற்று உறுதிப்படுத்தல்: பணிப்பெண்ணுக்கு முன்பு மீசில்ஸ் நோய் வந்து குணமானதற்கான ஆதாரம்.
இந்த ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். இது உங்கள் வீட்டில் உள்ளோரின் பாதுகாப்புக்கு முக்கியம்.
மனிதவள அமைச்சகம், மாதிரி ஆய்வுகள் மூலம் இந்த விதிமுறையை கண்காணிக்கும். தவறான தகவல் அளித்தால் அல்லது தடுப்பூசி ஆவணங்கள் இல்லையெனில், முதலாளிகளின் வேலை அனுமதி சலுகைகள் இடைநிறுத்தப்படலாம்.
புலம்பெயர் பணிப்பெண்களைப் பொறுத்தவரை, இந்த விதிமுறை அவர்களின் சுகாதாரத்தையும் பாதுகாக்கிறது. மீசில்ஸ் தடுப்பூசி, அவர்களை நோயிலிருந்து காக்கும் அதே வேளையில், அவர்கள் பணிபுரியும் குடும்பங்களின் குழந்தைகளையும் பாதுகாக்கிறது. ஆனால், இந்த செலவு முதலாளிகளுக்கு கூடுதல் பொருளாதார சுமையாக இருக்கலாம், குறிப்பாக குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களுக்கு.
சிங்கப்பூர் தேசிய தின அணிவகுப்பு 2025: பட்டம், ட்ரோன்கள் பறக்கத் தடை – மீறினால் கடும் நடவடிக்கை!