TamilSaaga

பிரான்சில் கடந்த ஒரே ஆண்டில் 102 பெண்கள் உயிரிழப்பு.. குடும்ப வன்முறையால் கொடுமை – உள்துறை அமைச்சர்

பிரான்சில் கடந்த ஓர் ஆண்டில் மட்டும் குடும்பத்திற்குள் ஏற்படும் வன்முறை காரணமாக 102 பெண்கள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் உள்துறை அமைச்சர் Gérald Darmanin.

கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டிலிருந்து பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டது. இதனால் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கும் சூழல் நிலவியது.

வீட்டிற்குள்ளேயே இருக்கும் நிலையால் பல்வேறு குடும்பங்களில் ஏற்பட்ட பிரச்சனையில் கணவரால், முன்னால் கணவரால் மற்றும் காதலரால் ஏற்படும் பிரச்சனைகளால் இதுவரை கடந்த ஆண்டில் மட்டும் 102 பெண்கள் உயிரிழந்துள்ளதாக கூறியுள்ளார்.

இப்படி குடும்ப வன்முறை காரணமாக பாதிக்கப்படும் பெண்கள் அரசின் உதவியை பெற புகார் எண்கள் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கடந்த 2020ல் மட்டும் 102 பெண்கள் குடும்ப வன்முறை காரணமாக உயிரிழந்துள்ளது அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக அமைந்துள்ளது.

Related posts