TamilSaaga

வந்தே பாரத் : சிங்கப்பூர், திருச்சி இருமார்கமான விமான சேவை – வெளியானது ஆகஸ்ட் மாத அட்டவணை

உலக அளவில் கொரோனா பரவல் காரணமாக உள்ளூர் மற்றும் பன்னாட்டு போக்குவரத்து பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக உலகின் பல நாடுகளில் இன்னும் முழுமையாக விமான சேவை அனுமதிக்கப்படவில்லை.

அதேபோல சிங்கப்பூர் அரசும் கடந்த ஓர் ஆண்டிற்கு மேலாக பல நாடுகளுக்கு தங்களுடைய எல்லைகளை மூடி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. அண்டை நாடான இந்தியாவில் கொரோனா பரவல் சற்று அதிகமாக காணப்படும் நிலையில் சிங்கப்பூர் இந்தியாவிற்கு இன்னும் தனது எல்லைகளை திறக்கவில்லை.

இருப்பினும் வந்தே பாரத் என்ற திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் மூலம் அவசர தேவை உள்ளவர்கள் தற்போது சிங்கப்பூர் வந்து செல்கின்றனர். மேலும் இந்த சேவை கடந்த ஓர் ஆண்டிற்கு மேலாக செயல்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வருகின்ற ஆகஸ்ட் மாதத்திற்கான வந்தே பாரத் டிக்கெட் புக்கிங் தற்போது தொடங்கியுள்ள நிலையில், சிங்கப்பூர் முதல் தமிழகத்தின் திருச்சிக்கு செல்லவுள்ள விமான சேவை குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவலின் அடிப்படையில், வரும் ஆகஸ்ட் மாதத்தில் வாரத்திற்கு மூன்று விமானங்கள் சிங்கப்பூர் முதல் திருச்சி வரை இருமார்கங்களாக விமான சேவை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் உள்ள அனைத்து புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமைகளிலும் சிங்கப்பூரில் இருந்து காலை 6.30 மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்டு திருச்சிக்கு காலை 8.05 மணியளவில் சென்றடையும்.

அதேபோல ஆகஸ்ட் மாதத்தில் உள்ள அனைத்து செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் திருச்சியில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு சிங்கப்பூர் நேரப்படி அடுத்த நாள் காலை 5.30க்கு சிங்கப்பூர் வந்துசேரும்.

Related posts