TamilSaaga

சிங்கப்பூர் TOTO லாட்டரியின் இந்த வார லக்கிமேன்… சிங்கம் மாதிரி தனியாக தட்டி தூக்கிய 33 கோடி…

சிங்கப்பூர் TOTO லாட்டரியின் இந்த வார குலுக்கல் நேற்று நவம்பர் 14ந் தேதி நடைபெற்றது. இதில் Group 1 எனப்படும் முதல் பரிசை வென்றவருக்கு $5,675,646 சிங்கப்பூர் டாலர் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் பிரபலமான TOTO லாட்டரியின் குலுக்கல் வாரம் இருமுறை நடைபெற்று வருகிறது. அதில் இந்த வாரத்திற்கான முதல் குலுக்கல் நேற்று நடந்தது. அதன் முதல் பரிசாக $5,675,646 அறிவிக்கப்பட்டு இருந்தது. இது இந்திய மதிப்பில், சுமார் 33 கோடிக்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த லாட்டரியில் முதல் பரிசான Group 1ல் யாரும் இல்லாத நிலையில், இந்த வாரத்தின் முதல் குலுக்கலிலே ஒருவருக்கு மிகப்பெரிய தொகை பரிசாக கிடைத்திருக்கிறது. இதை தொடர்ந்து, Group 2 எனப்படும் இரண்டாவது பரிசுத்தொகையாக $196,060 என அறிவிக்கப்பட்டு இருந்தது. இது இந்திய மதிப்பில் சுமார் 1 கோடி ரூபாயாகும். இந்த பரிசை மூன்று பேர் தட்டி சென்றனர். ஆனால் இந்த தொகை கடந்த வார இரண்டாவது லாட்டரியை விட குறைவு தானாம்.

மேலும், Group 3 பிரிவில் பரிசுத்தொகை $1,550 சிங்கப்பூர் டாலர். இது இந்திய மதிப்பில் 92000 ரூபாயாகும். இது 261 பேருக்கு கிடைத்துள்ளது. அடுத்து, Group 4வது பிரிவில் $359 சிங்கப்பூர் டாலர் பரிசுத்தொகை அறிவித்துள்ளனர். இது, 615 பேருக்கு கிடைத்துள்ளது. Group 5ல் $50 சிங்கப்பூர் டாலரை 13,637 பேர் பெற்றுள்ளனர். Group 6வது பிரிவில் $25 சிங்கப்பூர் டாலரை 16,625 பேர் பெற்றுள்ளனர். கடைசியாக Group 7ல் பரிசுத்தொகை $10 சிங்கப்பூர் டாலர். அது 239,442 பேருக்கு கிடைத்துள்ளது.

இந்த வார குலுக்கலில் பரிசு வென்ற அனைவருக்கும் தமிழ்சாகா சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இதையடுத்து, இந்த வாரத்தின் இரண்டாவது குலுக்கல் வரும் வியாழக்கிழமை (நவ.17) நடைபெற இருக்கிறது. இதில், முதல் பரிசாக, $1,000,000 சிங்கப்பூர் டாலர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், Group 1 எனப்படும் மொத்த பரிசுத் தொகை Rounding காரணமாக வேறுபடலாம்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” தளத்தை பின்தொடருங்கள்

Related posts