TamilSaaga

‘மீண்டும் புதிய உச்சம்’ – சிங்கப்பூரில் ஒரே நாளில் 163 பேருக்கு பரவிய தொற்று

சிங்கப்பூரில் இன்று (ஜூலை 19) புதிதாக 163 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் Jurong Fishery Port கிளஸ்டரில் மட்டும் 106 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி சிங்கப்பூரில் 188 பேருக்கு தொற்று உறுதியானது. அதனை தொடர்ந்து சிங்கப்பூரில் பதிவான அதிக அளவிலான தொற்று இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் திரும்பிய 9 பேர் உளப்பட நாட்டில் இன்று 163 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் திரும்பும் பலரிடம் தொற்று பரவல் அதிகமாக காணப்படும் நிலையில் பல நாடுகளுக்கு தங்களுடைய எல்லைகளை கடுமையாகிவருகின்றது சிங்கப்பூர் அரசு என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதுவரை சிங்கப்பூரில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையானது 63,073 என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது. அதே சமயம் சிகிச்சை முடிந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 62,212ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனா பாதிப்பால் 243 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 170 பேர் தனிமைப்படுத்துதலில் உள்ளனர். சிங்கப்பூரில் இதுவரை 36 பேர் கொரோனாவால் மரணித்துள்ளனர்.

Related posts