TamilSaaga

சூப்பரான வீடு வெளிநாட்டில் நிகழ்ச்சிகள் – அசத்தும் சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பொதுவாக அனைத்து தரப்பு மக்களை ஈர்த்த ஒரு நிகழ்ச்சி. கிட்டத்தட்ட பல சீசன்களை வெற்றிகரமாக கடந்த அந்த நிகழ்ச்சியின் 6வது சீசனில் கலந்துகொண்டவர் தான் செந்தில் கணேஷ். தான் சொந்தமாக எழுதும் கிராமிய பாடல்களை பாடி அசத்தும் கானக் குயில். சூப்பர் சிங்கர் என்னும் மேடையில் தன் திறமையால் ஜொலிக்கத் துவங்கினார்.

சாதாரண கிராமத்தில் பிறந்து வளர்ந்து சிறு சிறு கச்சேரிகளில் கிடைக்கும் வாய்ப்பை வருவாய்க்காக பயன்படுத்தி நாட்டுபுற பாடல்களை எழுதி பாடி தனது பாட்டு திறனை வெளிச்சத்துக்கு கொண்டு வர முயன்ற செந்தில் கணேஷ் மற்றும் இராஜலட்சுமி தங்களது முயற்சியால் வென்று காட்டியுள்ளனர்.

சூப்பர் சிங்கர் சீசன் 6 ல் இருவருமே கலந்துகொள்ள தேர்வாகினார்கள். தனித்தனி அணிகளில் பாடி தங்களது பாடல் திறமையால் மக்கள் மனதை கொள்ளை கொண்டார்கள். செந்தில் கணேஷ் தனது கடினமான முயற்சியால் அந்த சீசனின் டைட்டில் வின்னாரானார்.

அதற்கு பிறகு கணவர் மனைவி இருவரும் இணைந்து பிரபு தேவா நிக்கி கல்ராணி நடித்த சார்லி சாப்ளின் படத்தில் “என்ன மச்சான்” பாடலை பாடி அசத்தினர். பாடல் பெரிய ஹிட் அடித்தது. பிறகென்ன மேலும் பல பாடல் வாய்ப்புகள் வெளிநாடுகளில் நிகழ்ச்சிகள் என இத்தனை ஆண்டுகால உழைப்பிற்கு பலனை அனுபவிக்க துவங்கியுள்ளார்கள்.

கடந்த 2019ல் தங்களின் “களபம்” என்ற கிராமத்தில் சொந்தமாக ஒரு சூப்பர் மாடிவீடு கட்டி கிரஹப்பிரவேசம் செய்து அதனை மகிழ்ச்சியோடு இணையத்தில் பதிவிட்டார் செந்தில் கணேஷ். வாழ்க்கையில் விடா முயற்சி இருந்தால் அது விஸ்வரூப வெற்றியாக மாறும் என்பதற்கு ஓர் நிகழ்கால உதாரணம்.

Related posts