TamilSaaga

வந்தே பாரத் : சிங்கப்பூர் முதல் திருச்சி வரை – இன்று பறந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

உலக அளவில் பெருந்தொற்று பரவல் காரணமாக உள்ளூர் மற்றும் பன்னாட்டு போக்குவரத்து பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக உலகின் பல நாடுகளில் இன்னும் முழுமையாக விமான சேவை அனுமதிக்கப்படவில்லை.

அதேபோல சிங்கப்பூர் அரசும் கடந்த ஓர் ஆண்டிற்கு மேலாக பல நாடுகளுக்கு தங்களுடைய எல்லைகளை மூடி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. மியான்மரில் தொற்று எண்ணிக்கை அதிகமாகியுள்ளதால் அங்கிருந்து சிங்கப்பூர் வரும் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அண்டை நாடான இந்தியாவிலும் கொரோனா பரவல் காணப்படும் நிலையில் சிங்கப்பூர் இந்தியாவிற்கு இன்னும் தனது எல்லைகளை திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் வந்தே பாரத் என்ற திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் மூலம் அவசர தேவை உள்ளவர்கள் தற்போது இந்தியாவின் பல பாகங்களில் இருந்து சிங்கப்பூர் வந்து செல்கின்றனர். மேலும் இந்த சேவை கடந்த ஓர் ஆண்டிற்கும் மேலாக செயல்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று (ஜூலை 14) இம்மாத வந்தே பாரத் அட்டவணையின் அடிப்படையில் சிங்கப்பூரில் இருந்ததில் தமிழகத்தின் திருச்சிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்டு சென்றது. மேலும் சிங்கப்பூரில் இருந்து அண்டை நாடான இந்தியாவின் பல இடங்களுக்கு வந்தே பாரத் சேவை தொடர்ந்து வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts