நேற்று கிறிஸ்துமஸ் தினத்தன்று சிங்கப்பூரில் SBS டிரான்சிட் பேருந்து ஒன்று மரத்தில் மோதியதில் 6 பேர் காயமடைந்தனர். சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF), நேற்று சனிக்கிழமை (டிசம்பர் 25) வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த விபத்து குறித்து காலை 11 மணியளவில் தங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிவித்தது. அந்த பேருந்து, தம்பைன்ஸ் விரைவுச் சாலையிலிருந்து கல்லங்-பயா லெபார் விரைவுச் சாலையை (KPE) நோக்கிச் சென்று கொண்டிருந்த போது மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது என்று SCDF தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள் : சிங்கப்பூர் River Valley சாலையில் உள்ள பாரில் புதிய Omicron தொற்று குழுமம்
SCDF அதிகாரிகள் வந்து பார்த்தபோது, 40 வயதான ஓட்டுனர் இருக்கையில் சிக்கிக் கொண்டதையும், தன்னை விடுவித்துக் கொள்ள முடியவில்லை என்பதையும் கண்டறிந்தனர். பின்னர் ஹைட்ராலிக் மீட்பு உபகரணங்களைப் பயன்படுத்தி அவரை மீட்டு, பின்னர் சிகிச்சைக்காக சாங்கி பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். காயமடைந்த மற்றவர்கள் செங்காங் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.