TamilSaaga

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நல வாரியம்.. அசத்தலான திட்டங்கள் – தமிழக அரசு அறிவிப்பு

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவிடவும் அவர்கள் பிரச்சனைகளை தீர்க்கவும் தமிழ்நாடு அரசாமது ” புலம்பெயர் தொழிலாளர்கள் நல வாரியம்” ஒன்றை அமைத்துள்ளது. மேலும் இந்த வாரியத்தின் முக்கிய சேவைகளை பட்டியலிட்டு வெளியிட்டுள்ளது.

1.புலம்பெயர் தொழிலாளர்களாக இருக்கும் தமிழர்கள் பற்றிய தரவு தளம் (DataBase) அமைக்கப்படும்.

2.பணியின் போது இறப்பவர்களின் குடும்பங்களுக்கு கல்வி மற்றும் திருமண உதவித்தொகை வழங்கப்படும்

3.தொழிலாளர்கள் ஆலோசனை பெருவதற்காக இலவச கட்டணமில்லாத தொலைபேசி, இணையதளம் மற்றும் மொபைல் அப்ளிக்கேஷன் உருவாக்கப்படும்.

4.அரசு மற்றும் தொழில் நிறுவங்களில் பாதுகாப்பாக முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் உருவாக்கப்படும்

5.புலம்பெயர் தொழிலாளர்களுக்காக இலவச சட்ட ஆலோசனை உதவி மையம் உருவாக்கப்படும்.

6.நாடு திரும்பும் தொழிலாளர்களுக்கு கடன்வசதி மானியத்துடன் வழங்கப்படும்.

7.சொந்த ஊருக்கு உதவிட விரும்புபவர்களுக்காக “எனது கிராமம்” என்ற செயலி உருவாக்கப்படும்.

8.புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தமிழ் பயிற்றுவிக்கப்பட்டு அதற்கு உதவித்தொகை வழங்கப்படும் போன்ற அறிவிப்புகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

Related posts