TamilSaaga

“சிங்கப்பூரில் இனங்களுக்கு இடையே பகைமை வளர்த்ததாக குற்றச்சாட்டு” : சுபாஸ் நாயர் கோர்ட்டில் ஆஜர்

சிங்கப்பூரில் உள்ளூர் இசைக்கலைஞர் சுபாஸ் நாயர்வாஸ் மீது இந்து திங்கள்கிழமை (நவம்பர் 1) நீதிமன்றத்தில் பல்வேறு மத மற்றும் இனக்குழுக்களுக்கு இடையே தவறான எண்ணத்தை வளர்க்க முயன்றதாக நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. போலீசாரின் முந்தைய அறிக்கையில், 28 வயது நிரம்பிய நாயர், கடந்த ஆகஸ்ட் 14, 2019 அன்று வழங்கப்பட்ட 24 மாத நிபந்தனை எச்சரிக்கையை மீறியதாகக் கூறப்படுகிறது . மேலும், இனவெறி குற்றம் சாட்டப்பட்ட ராப் வீடியோவை ஆன்லைனில் தயாரித்து வெளியிட்டதாகக் கூறப்பட்டது.

இந்த கிளிப், சீன மற்றும் பிற இனங்களுக்கு இடையே தவறான உணர்வுகளை ஊக்குவிக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் மீண்டும் அதுபோன்ற குற்றம் செய்தால், அவர் மீண்டும் எச்சரிக்கப்பட்ட குற்றத்திற்காக நாயர் மீது வழக்குத் தொடரப்படலாம். எச்சரிக்கை இருந்தபோதிலும், நாயர் கடந்த ஆண்டு ஜூலை 25 அன்று, மற்றொரு சமூகத்திற்கு எதிராக வெறுக்கத்தக்க கருத்துக்களை வெளியிட்ட சீன கிறிஸ்தவர்களின் வீடியோவுக்கு பதிலளிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் கருத்துகளை வெளியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2019ம் ஆண்டு சீனர்களுக்கும் இந்தியர்களுக்கும் இடையே தவறான உணர்வுகளை வளர்க்க முயன்றதாகவும் நாயர் மீது குற்றம் சாட்டப்பட்டது. பின்னர் போலீஸ் விசாரணையில், நாயர் மார்ச் 11 அன்று ஒரு உட்புற மேடை நிகழ்ச்சியின் போது, ஒரு கார்ட்டூன் வரைபடத்தை காட்சிப்படுத்தியதன் மூலம் சீனர்களுக்கும் இந்தியர்களுக்கும் இடையே தவறான உணர்வுகளை ஊக்குவிக்க முயன்றார்.

அப்போது அவர் வழக்கு நவம்பர் 29 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது மற்றும் அவருக்கு 10,000 வெள்ளியில் ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும், மதம் அல்லது இனத்தின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே தவறான எண்ணத்தை வளர்க்க முயற்சிக்கும் குற்றவாளிக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

Related posts