TamilSaaga

“கழட்டிவிட்ட மலேசியா” : ஆனால் சற்றும் தளராமல் போராடி சிகரத்தைத் தொடும் சிங்கப்பூர்

சிங்கப்பூர் பிறந்த கதை பலருக்கு சுவாரஸ்யமாக தான் இருக்கும், குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், கண்ணீருக்கும், கையறு நிலைக்கும் நடுநடுவே, சிங்கப்பூர் உருவான கதை இதோ உங்களுக்காக.! இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளை அடிமை நாடுகளாக கொண்டிருந்த ஆங்கிலேயர்கள், சிங்கப்பூரையும் தங்கள் கைவசம் வைத்திருந்தனர். இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பான், சிங்கப்பூரின் மீது கடும் தாக்குதல் நடத்தியது. ஆயினும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மீது ஜப்பானியர்கள் வைத்திருந்த மரியாதையின் காரணமாக, அவர்கள், சிங்கப்பூர் வாழ் இந்தியர்களை துன்புறுத்தாமல் இருந்தனர்.

“குடும்ப வறுமையால் அப்படி செஞ்சுட்டேன்” : சிங்கப்பூரில் மூதாட்டியை ஏமாற்றி பணம் எடுத்த பணிப்பெண் – முடிவு சிறை

இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தபிறகு சிங்கப்பூரிலிருந்து, ஜப்பான் வெளியேறியது. பிரிட்டன், சிங்கப்பூருக்கு சுயாட்சி அந்தஸ்து வழங்கியது. அதே சமயத்தில், மலேசியாவும் விடுதலை பெற்றது. மலேசியாவின் விடுதலை பற்றிய செய்தி, பிரிட்டன் ஆளுகைக்கு கீழ் இருக்கும் அண்டை நாடான சிங்கப்பூரில் தீயாய்ப் பரவியது. சிங்கப்பூர் மக்களும், அரசியல் தலைவர்களும் விடுதலைக் குரல் உயர்த்தினர். சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க விரும்பினர்.இந்த சமயத்தில், லண்டனில் வக்கீல் படிப்பை முடித்து தாயகம் திரும்பிய லீ குவான், தபால் ஊழியர்கள் போராட்டம், மாணவர்கள் போராட்டம் ஆகிய பிரச்சனைகளுக்கு ஆதரவாகக் களமிறங்கினார்.

சிங்கை மக்கள் மத்தியில் லீ குவானின் பெயர் பிரபலமானது. “சிங்கையை சிருஷ்டிக்க வந்த ரட்சகர்” என லீயை தலையில் தூக்கிவைத்து கொண்டாடியது ஜனத்திரள். லீயின் விடாமுயற்சியாலும், மக்கள் கிளர்ச்சி, பேச்சுவார்த்தை, கையெழுத்து இயக்கம், தலைவர்களின் தொடர் வலியுறுத்தல், இரண்டாம் உலகப் போரின் பாதிப்பு போன்ற பல்வேறு காரணங்களால், 1959-ம் ஆண்டு பிரிட்டன் அரசு, சிங்கப்பூருக்கு விடுதலை கொடுத்தது. இந்நிலையில், “மக்கள் செயல் கட்சி”யை உருவாக்கி வெற்றி நடை போட்டுவந்த லீ குவான், சிங்கப்பூரின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினார். மிகக் குறைவான இயற்கை வளங்களைக் கொண்ட தேசமாக சிங்கப்பூர் இருந்தது. தன் தேவைகளுக்கு அண்டை நாடான மலேசியாவையே பெரும்பாலும் சார்ந்திருந்தது. குடிநீர் கூட மலேசியாவில் இருந்துதான் கொண்டுவரப்பட்டது. இந்த சூழ்நிலையை உணர்ந்து லீ, சிங்கப்பூரை மலேசியாவுடன் இணைப்பதற்கு பலகட்ட முயற்சிகளை மேற்கொண்டார்.

சிங்கப்பூரில் அபகரித்த பணத்தில் மலேசியாவில் வீடு? – மன்னிப்பு கேட்டு மீண்டும் தவறு செய்த பெண் – ஆடிப்போன மருத்துவமனை

மேலும், வானொலி, பொதுக்கூட்டம் வழியாக, சிங்கப்பூர் மலேசியாவுடன் இணைந்தால், உருவாகும் நன்மைகளை, மக்களுக்கு புரியும் வகையில் பட்டியலிட்டு எடுத்துக் கூறினார். மக்களும், லீயின் கருத்துக்களை புரிந்துகொண்டு அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். 1963-ம் ஆண்டு, சிங்கப்பூர் அதிகாரப்பூர்வமாக மலேசிய கூட்டரசில் இணைந்தது. சிங்கப்பூர் மக்களுக்காக பல திட்டங்களை லீ நிறைவேற்றி வந்தார். அவருடைய மக்கள் நலத் திட்டங்கள் சிங்கப்பூரில் வாழும் மலாய், சீனம், தமிழ் மக்களுக்குப் பெரும் நம்பிக்கையைத் தந்தது. இதனால், லீயின் செல்வாக்கு சிங்கப்பூரை தாண்டி மலேசியா வரை பரவியது.

மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் கூட்டரசில் இருந்தபோதிலும், மலேசிய அரசியலில் தலையிடாமல், சிங்கப்பூர் சுதந்திர நாடாகவே செயல்பட விரும்புகிறது என்று, லீ தனது கருத்தை வெளிப்படுத்தினார். லீயின் இந்த பேச்சை விரும்பாத மலேசியப் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான், சிங்கப்பூரை ஆரம்பத்திலேயே தட்டி வைக்க வேண்டும் என்று முடிவெடுத்தார். என் வளர்ச்சி, மலேசிய ஆட்சியாளர்களைக் கலவரப்படுத்தியது. எப்படியாவது, இவரை கூட்டரசில் இருந்து அகற்றிவிட வேண்டும் என்று முடிவு செய்தனர்.
முதற்கட்டமாக, சிங்கப்பூரிலிருந்து மலேசியாவிற்கு செல்லும் பொருட்களுக்கு அதிகப்படியான வரியை விதித்தனர். லீ இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தார். எனினும் மலேசிய அரசு, லீயின் வேண்டுகோளுக்கு செவிமடுக்கவில்லை.

புத்தாண்டு பிறந்தாச்சு.. சிங்கப்பூர் – கோவை Fly Scoot விமான சேவை துவங்கியாச்சு – வெளியான புதிய Update

இந்நிலையில், சிங்கப்பூரில் ஒரு இனக்கலவரம் அரங்கேறியது. சிங்கப்பூர், தனித்துவிடப்படுவதற்கு தொடக்க புள்ளியாக இந்த கலவரமே திகழ்ந்தது என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. 1964-ம் ஆண்டு, சிங்கப்பூரின் பதாங் பகுதியில் நபிகள் நாயகத்தின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது, சீனர்களுக்கும் மலாய்களுக்கும் இடையில் திடீர் கலவரம் வெடித்தது. இந்தக் கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர் பல உயிர்கள் பலியாகின. மலேசிய-சிங்கப்பூர் அரசுகளுக்கு இடையே பதற்றத்தை உருவாக்கியது.

கலவரத்திற்கான காரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் இரு தரப்பினர் மீதும் வைக்கப்பட்டது. இந்நிலையில், மலேசியாவோ ஒரு படி மேலே போய், சிங்கப்பூரை வெட்டிவிட்டால் தான் இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று வெளிப்படையாகவே அறிவித்தது லீ, மலேசியா மீது குற்றச்சாட்டுக்கள் எதுவும் வைக்காமல் மிக கவனமாக இந்த கலவரத்தை கையாள முயற்சித்தார். ஆயினும், இந்தக் கலவரங்களுக்கு சிங்கப்பூரர்கள் மட்டுமே காரணம் ஆகிவிட முடியாது என்பதை திட்டவட்டமாக தெரிவித்தார். இது முதல் கூட்டரசு எழும் அனைத்து பிரச்சனைகளுக்கும் சிங்கப்பூரர்கள் தான் காரணம் என்று மலேசியா குற்றம் சாட்ட தொடங்கியது. இந்நிலையில், மீண்டும் இன்னொரு இனக்கலவரம் மூண்டது. இந்தக் கலவரத்தை காரணமாக காட்டி, மலேசிய நாடாளுமன்றத்தில், சிங்கப்பூரை வெளியேற்றுவது குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 126-க்கு பூஜ்யம் என்ற அளவில் வாக்களித்து சிங்கப்பூரை வெளியேற்றியது மலேசியா.

மலேசியா, தனது முடிவை மறுபரிசீலனை செய்யும்படி லீ எவ்வளவோ கேட்டுக் கொண்டார். வெட்டிவிட சமயம் பார்த்துக் கொண்டிருந்த மலேசிய பிரதமர் துங்கு அப்துல் ரகுமானின் காதுகளுக்கோ, மற்ற மலேசிய அரசியல் பிரதிநிதிகளின் காதுகளுக்கோ , லீ-யின் கவலைக் குரல் எட்டவில்லை. கனத்த இதயத்தோடு, 1965 ஆகஸ்ட் 9-ம் தேதி, மலேசிய கூட்டரசில் இருந்து சிங்கப்பூர் வெளியேறியதாக, லீ பத்திரிகையாளர் முன்னிலையில் அறிவித்தார். அப்போது, “இந்தப் பிரிவினையை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. என் வாழ்க்கை முழுதும், சிங்கப்பூர், மலேசியாவுடன் இணைந்தே இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன். பொருளாதாரம் மற்றும் புவிப் பரப்பின் அடிப்படையில் இருதரப்பு மக்களும் ரத்த உறவினர்கள். ஆனாலும், இந்தப் பிரிவு நடந்தேறிவிட்டது” என உடைந்து அழுதார் லீ. இந்த நாள் தான் சிங்கப்பூரின் தேசிய நாளாக அனுசரிக்கப்படுகிறது.

“சில்லென்ற வானிலை தொடரும்” – சிங்கப்பூரில் ஜனவரி 2022 தொடக்கத்தில் அதிக மழைக்கு வாய்ப்பு

சிங்கப்பூர் இனி சுதந்திர நாடாக இயங்கப் போவதாக அறிவித்த சிங்கைப் பிரதமர் லீ குவான், பேசும்போதே உடைந்து அழுதார். ‘ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்’ எனக் கண்ணீர் வடிக்கவில்லை. மாறாக, வேண்டாத சுதந்திரத்தை திணித்துவிட்டனரே என்று நொந்து அழுதார். பிரிவுக்குப் பிறகு ஒரு வார காலம் பொதுவெளியில் லீ குவான் தோன்றவில்லை. செய்வதறியாது திகைத்து நின்றார். சில நாட்களுக்குப் பிறகு செய்யவேண்டிய பணிகளை தொடர்ந்து செய்யத் தொடங்கினார் லீ. மலேசியப் படைகள் சிங்கப்பூர் எல்லையில் இருந்து வெளியேறியதால், எல்லைப் பாதுகாப்பு கேள்விக் குறியானது. எப்போது சிங்கப்பூரை விழுங்கலாம் என்று காத்துக்கொண்டிருந்த இந்தோனேசியாவிடமிருந்து சிங்கப்பூரை பாதுகாக்க, லீ, குறிப்பிட்ட காலத்திற்கு பிரிட்டனிடம் படை உதவி கேட்டு ஒப்பந்தம் போட்டார். ஒப்பந்தம் முடிவதற்குள், ராணுவப் பாதுகாப்பை உறுதிசெய்தார்.

பிறகு, மலாய், சீனம், தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றை சிங்கப்பூரின் அரசு மொழிகளாக அறிவித்தார். இப்படி ஒவ்வொன்றாகச் சரிசெய்தார். உலக வரைபடத்தில் மிகவும் சிறிய நாடாக விளங்கிய சிங்கப்பூரை சிகரத்தைத் தொடும் அளவிற்கு உயர்த்தி காட்டினார். சிங்கப்பூரின் பொருளாதாரம் அசுரவேகத்தில் வளர்ந்தது. மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டது. அதேசமயம் அரசு கெடுபிடிகளை அதிகரித்தது. ஊடக சுதந்திரமின்மை, எதிர்க்கட்சிகளை ஒடுக்குவது, சர்வாதிகாரப் போக்கு உள்ளிட்ட பல்வேறு விமர்சனங்கள் லீ மீது முன்வைக்கப்பட்டது.

ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், உலக அரங்கில் சிங்கப்பூரை சிம்மாசனத்தில் அமர்த்தியது லீ குவான் என்ற உண்மையை யாராலும் மறுக்க இயலாது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts