TamilSaaga

“தேசிய தின அணிவகுப்பு” : 5 இடங்கள், 1200 கலைஞர்கள் – விழாக்கோலம் கொண்ட சிங்கப்பூர்

சிங்கப்பூரில் வரும் ஞாயிற்று கிழமை (ஆகஸ்ட் 21) தேசிய தின அணிவகுப்பு நடைபெறவுள்ளது. கடந்த ஆண்டும் பெருந்தொற்று காரணமாக தேசிய தின அணிவகுப்பு தடைப்பட்டதது குறிப்பிடத்தக்கது. அதே போல இந்த ஆண்டும் கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி தேசிய தினத்தன்று நடைபெறவிருந்த அணிவகுப்பு தற்போது வரும் ஆகஸ்ட் 21ம் தேதி நடைபெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வரும் 21ம் தேதி நடக்கும் இந்த அனுவகுப்பில் மெரினா பேவில் தேசிய தின அணிவகுப்பின் (NDP) நிகழ்ச்சி பிரிவில் சுமார் 600 கலைஞர்கள் மேடைக்கு வருவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2018ம் ஆண்டில் 3,000 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில், பள்ளிகள், மக்கள் சங்கம் போன்ற சமூக குழுக்கள் மற்றும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் மற்றும் குடியரசு பாலிடெக்னிக் போன்ற உயர் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 600 பங்கேற்பாளர்களின் மெய்நிகர் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கப்படவுள்ளன.

மேலும் 21ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சிகளில் பாடகர்-பாடலாசிரியர் பெஞ்சமின் கெங் மற்றும் செசாய் செசாலி ஆகியோர் கலந்துகொள்வதாக NDP செயற்குழு தெரிவித்துள்ளது. நான்கு நடிப்பு நிகழ்ச்சிகளை வீட்டிலிருந்து தொலைக்காட்சியில் பார்க்கும் வண்ணம் பார்வையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் குழு தெரிவித்துள்ளது.

Related posts