சிங்கப்பூரில் இதுவரை 62,366 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 61,987 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். நேற்று மட்டும் சுமார் 27 பேர் கொரோனா சிகிச்சையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதைத்தவிர 152 நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் இதில் ஒருவர் மட்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
209 பேர் சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றனர்.
இதுவரை சிங்கப்பூரில் கொரோனா தொற்று பரவலால் 34 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.