TamilSaaga

“எங்கள் சேவைக்காலம் முடிந்து விட்டது” : சாங்கி கண்காட்சி மையத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு பிரம்மாண்டங்கள்

சிங்கப்பூரில் தொலைதூர ஏவியேஷன் பார்க் சாலையில் நேற்று திங்கள்கிழமை (அக்டோபர் 4) இரவு 10.30 மணி கடந்துவிட்ட நிலையில் சுமார் இரவு 11 மணியளவில், ஏறத்தாழ 2 கிமீ நீளமுள்ள அந்த சாலை முடக்கப்பட்டது. இதற்கு முன்பாக அதன் விளக்கு கம்பங்கள் அகற்றப்பட்டது. இருபுறமும் குறைந்த மின்விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. அந்த ஆபரேஷன் தொடங்குவதற்கு எல்லாம் தயாராக இருந்தது. சில மணிநேரம் நீடித்த ஒரு அந்த ஆபரேஷனில், இரண்டு சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் (SIA) ஏர்பஸ் A380 கள் சாங்கி கண்காட்சி மையத்திற்கான இறுதி பயணத்தில் இழுத்துச் செல்லப்பட்டன. SIA தனது சூப்பர்ஜம்போக்களை உள்நாட்டில் அகற்றுவது இதுவே முதல் முறை.

அந்த விமானங்களின் பதிவு எண்கள் 9V-SKH மற்றும் 9V-SKG ஆகும். ஏழு ஏ 380களில் எஸ்ஐஏ கடந்த ஆண்டு நவம்பரில் ஓய்வு பெறுவதாக அறிவித்தது. பெருந்தொற்று நோய் பரவலால் பயணிகளின் எண்ணிக்கை ஏறக்குறைய 99 சதவிகிதம் குறைந்துவிட்டதால் காலாண்டின் முதல் பாதி நிகர இழப்பு 3.5 பில்லியன் டாலர்கள் என்று ஆனது.

விமானம் வலைத்தளமான பிளான்ஸ்பாட்டர்களின் தரவுகளின்படி, இந்த விமானம் மே மற்றும் ஜூன் 2009ல் பெறப்பட்டுள்ளது. SIA முன்பு ஓய்வு பெற்ற ஐந்து A380கள் அனைத்தும் சுமார் பத்தாண்டுகளாக சேவையில் இருந்தன. உள்ளூர் மற்றும் சர்வதேச விற்பனையாளர்களின் நிபுணத்துவம், சர்வதேச எல்லைகளை மூடுவது மற்றும் விமானத்தை அகற்றுவதற்கான செலவு உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் A380 களை உள்நாட்டில் அகற்றுவதற்கான இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று SNA செய்தித் தொடர்பாளர் CNAவிடம் கூறினார்.

Related posts