TamilSaaga

சிங்கப்பூரில் Process Sectorல் பணிபுரியும் ஊழியர்களை.. புதிய Work Permit-ல் வேறு நிறுவனத்துக்கு மாற்ற 7 நாட்களே அனுமதி.. வாழ்க்கையையே மாற்ற ஒரு பிரகாசமான வாய்ப்பு – சிங்கை அரசுக்கு சல்யூட்!

சிங்கப்பூரில் தற்போது Process Sectorல் பணிபுரியும் ஊழியர்கள், தங்களின் (Work Permit), காலாவதியாக இன்னும் 40 முதல் 21 நாட்கள் இருக்கும் பட்சத்தில், அந்த தொழிலாளர்களை இங்குள்ள புதிய முதலாளிகள் வேலைக்கு அமர்த்த முடியும். நேற்று (ஜுலை 1) முதல் இந்த விதி அமலுக்கு வந்த நிலையில், தமிழ் சாகா சிங்கப்பூர் தளம் சார்பில் இதுகுறித்து செய்திகள் வெளியிடப்பட்டது.

இந்த புதிய சலுகை NTS, NAS மற்றும் PRC வகையின் கீழ் உள்ள நாடுகளில் இருந்து வரும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

NTS என்பது Non-Traditional Sources ஆகும், இந்தியா, இலங்கை, தாய்லாந்து, பங்களாதேஷ், மியான்மார் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் NTS வரிசையில் வரும்.

அதேபோல், NAS என்பது North Asian Sources என்பதாகும், ஹாங்காங் (HKSAR Passport), மக்காவு, சவுத் கொரியா மற்றும் தைவான் ஆகிய நாடுகள் இதில் அடங்குகின்றன.

PRC என்பது Peoples Republic of Chinaவை குறிக்கின்றது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள நாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்து Process Sectorல் பணிபுரிபவர்கள் 40 முதல் 21 நாட்களுக்கும் காலாவதியாகும் Work Permitல் இருந்தால் அவர்களை தங்கள் நிறுவனத்தில் முதலாளிகள் பணியமர்த்தலாம்.

மேலும் படிக்க – அப்பாவோ சேலத்தில் ஒரு சாதாரண ஓட்டுநர் பயிற்சியாளர்.. மகளோ சிங்கப்பூரில் “Respected Officer” – வாழப்பாடியே வாயைப் பிளக்க நடந்த “France – Salem” கல்யாணம்!

ஏற்கனவே சிங்கப்பூரில் பணிபுரிந்தவர் என்றார் நல்ல அனுபவம் வாய்ந்த பயணியாளராக இருப்பார். மேலும் புதிய தொழிலாளர்களைக் கொண்டுவருவதற்கான செலவை இதன் மூலம் குறைக்கமுடியும் என்ற இரு காரணங்களை கருத்தில் கொண்டே சிங்கை அரசு இந்த சலுகையை கொண்டு வந்துள்ளது.

அதுவே தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியரை மாற்ற விரும்பவில்லை எனில், அவரின் Work Permit-ஐ Renewal செய்து தக்க வைத்துக் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக “ரமேஷ்” எனும் ஊழியரை அவர் வேலைப்பார்க்கும் சிங்கை நிறுவனம், தக்க வைத்துக் கொள்ள விரும்பினால், Renewal Notice-ஐ பெற்றவுடன், அவர்களின் Work Permit-ஐ முன்கூட்டியே புதுப்பித்து தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

அதுவே, “ரமேஷ்” எனும் அந்த ஊழியரின் Work Permit முடிய 40 முதல் 21 நாட்கள் இருக்கும் பட்சத்தில், வேறொரு நிறுவனம் அவரை வேலைக்கு எடுக்க விண்ணப்பித்தால், அது குறித்த தகவலை MOM குறுஞ்செய்தி மூலமாகவோ அல்லது WP Online administrator-க்கு மெயில் மூலமாகவோ அனுப்பிவிடும். ரமேஷை மாற்றிக் கொள்ள விருப்பமா இல்லையா என்பதை WP Online-ஐ Log-In செய்து அந்த குறிப்பிட்ட நிறுவனம் தங்கள் பதிலை தெரிவிக்கலாம்.

சரி.. ரமேஷ் எனும் அந்த ஊழியரை ஒரு புதிய நிறுவனம் தேர்வு செய்ய விரும்பினால் எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

பொதுவான பணி அனுமதி விண்ணப்ப செயல்முறையைப் பின்பற்றவும்.

ரமேஷ் வேலைப்பார்த்த முதலாளிக்கு ஒரு SMS அல்லது மின்னஞ்சல் அனுப்பப்படும். 7 வேலை நாட்களுக்குள், அந்த கோரிக்கையை ரமேஷின் முதலாளி ஏற்கவோ அல்லது நிராகரிக்கவோ வேண்டும். அப்படி அவர் Reply செய்யாவிட்டால், சமர்ப்பிக்கப்பட்ட பணி அனுமதி விண்ணப்பம் தானாகவே நிராகரிக்கப்படும்.

ஒப்புதலுக்குப் பிறகு, நீங்கள் பணி அனுமதியைப் பெற வேண்டும்.

வேலை அனுமதி வழங்குதல்

தற்போதைய அனுமதி ரத்து செய்யப்பட்டாலோ அல்லது காலாவதியாகினாலோ மட்டுமே பணி அனுமதியை வழங்குமாறு கோர முடியும்.

தற்போதைய பணி அனுமதி செல்லாது எனில், MOM சார்பில் நிறுவனத்துக்கு SMS அல்லது மின்னஞ்சல் அனுப்பப்படும். புதிய பணி அனுமதிச் சீட்டைப் பெற நிறுவனத்துக்கு 14 நாட்கள் அவகாசம் இருக்கும். இல்லையெனில், இடமாற்ற ஒப்புதல் ரத்து செய்யப்படும். அதுமட்டுமின்றி, அதிக நாள் தங்கியிருந்தால் அபராதம் விதிக்கப்படும்.

அதேசமயம், புதிய Work Permit application-ஐ அந்த முதலாளில் ஏற்றுக் கொண்ட பிறகு மனம் மாறினால், அந்த குறிப்பிட்ட தொழிலாளரை சொந்த நாட்டிற்கு அனுப்பி விட வேண்டும்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts