TamilSaaga

சிங்கப்பூர் கோவிட் நிலைமை குறித்து பிரதமர் உரை – இன்று நண்பகல் ஒளிபரப்பு

சிங்கப்பூர் கோவிட் -19 நிலைமை குறித்து இன்று (சனிக்கிழமை) (அக்டோபர் 9) நண்பகல் ஒளிபரப்பில் பிரதமர் லீ சியன் லூங் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.

“கோவிட் -19 நிலைமை மற்றும் புதிய இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான பாதை குறித்து நான் சிங்கப்பூரர்களிடையே உரையாற்றுவேன்” என்று அவர் நேற்று வெள்ளிக்கிழமை முகநூல் பதிவில் கூறினார்.

“தயவுசெய்து வழக்கம் போல் தொடரவும், பொருட்களை சேமித்து வைக்க அல்லது வெளியே சாப்பிட அவசரப்பட தேவையில்லை!” என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவரது உரையை முகநூல் பக்கம் மற்றும் யூடியூப் சேனலில் நேரலையாகப் பார்க்கலாம். இது திரு லீயின் முகநூல் பக்கத்திலும் ஒளிபரப்பபடும்.

சிங்கப்பூரின் ஒரு மாதகால நிலைப்படுத்தல் கட்டத்தில் கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் ஆகிறது, இது செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 25 வரை கோவிட் -19 இன் சமூக பரவலை குறைக்கவும் மற்றும் சுகாதார அமைப்பு, புதிய நெறிமுறைகளுக்கான நேரத்தை வாங்கவும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

உணவருந்துதல் மற்றும் சமூகக் கூட்டங்கள் இரண்டு நபர்களுக்கு மட்டுமே அனுமதி என மீண்டும் ஒரு முறை மூடப்பட்டது. மேலும் வீட்டிலிருந்து வேலை செய்வது இயல்புநிலை ஏற்பாடாக இருந்துவருகிறது. இச்சூழலில் நாட்டு மக்களிடம் பிரதமர் உரையாற்றுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Related posts