சிங்கப்பூரை பொறுத்தவரை நீர்நாய்களின் ஆதிக்கம் கடந்த சில காலமாக அதிகரித்துள்ளது என்று தான் கூறவேண்டும். அந்த வகையில் சிங்கப்பூர் “River Valley” பகுதியில் அவை அடித்த கும்மாளம் வீடியோவாக தற்போது வெளியாகியுள்ளது.
அதுவும் அவை கும்மாளம் அடித்தது அங்கிருந்த நீர்நிலைகளில் அல்ல மாறாக ஒரு நிறுவன வாசலில் இருந்த Fountainல். இரண்டு நீர்நாய்கள் ஆழமற்ற அந்த Fountainல் உள்ளேயும் வெளியேயும் டால்பின் போல நீந்தி செல்வதை காணமுடிந்தது.
Singapore Wildlife Sightings என்று முகநூல் குழுவில் ஒரு சிறிய கிளிப்பை வெளியிட்ட ஃபேஸ்புக் பயனரான சன்ஷைன் யிலிங் மூலம் தான் இந்த நீர்நாய்களின் வேடிக்கையான விளையாட்டு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நீர்நாய்கள் கும்மாளம் போட்ட காணொளி – Video Courtesy Singapore Wildlife Sightings
பலர் அவற்றைப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முயற்சித்த போதிலும், நீர்நாய்களின் குழு அதை கண்டுகொண்டதாக தெரியவில்லை. மாறாக அவை அந்த Fountainனின் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை நீந்தியும் முன்னும் பின்னுமாக ஓடுவதையும் காண முடிந்தது.
அந்த குறிப்பிட்ட Fountain நீர்நாய்களுக்கு “தண்ணீர் விளையாட்டு மைதானம் போல மாறியுள்ளது” என்று பலரும் கூறினர். உண்மையில் யாருக்கும் தொல்லைதறாமல் அவை அங்கு குதூகலித்தது பலருக்கு கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது.