TamilSaaga

“சைக்ளிங் சென்றபோது மாரடைப்பு” : விரைந்து வந்து காப்பாற்றிய Life Guards – சிங்கப்பூர் சமூக உயிர்காப்பாளர் விருது

சிங்கப்பூரில் கடந்த மே மாதம் 29ம் தேதி இரவு, ஜூரோங் லேக் கார்டன்ஸில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த ஒரு நபர் தீடீர் என்று ஏற்பட்ட மாரடைப்பால் பாதிக்கப்பட்டு கீழே சரிந்தார். உடனடியாக அந்த பகுதியில் கடமையில் இருக்கும் ஸ்போர்ட் சிங்கப்பூர் உயிர்காப்பாளர்களான திரு. டாங் ஜீ மற்றும் திரு லியோங் வை கிட், அருகிலுள்ள ஜூரோங் கிழக்கு நீச்சல் வளாகத்தில் இருந்தபோது, ​​ஒரு வழிப்போக்கரால் அங்கு மாரடைப்பால் சரிந்து கிடந்த நபர் குறித்து தகவல் பெற்றனர்.

செய்தி அறிந்த இரண்டு உயிர்காப்பாளர்களும் உடனடியாக நீச்சல் வளாகத்திலிருந்து ஒரு தானியங்கி வெளிப்புற டிஃபிபிரிலேட்டரை (AED) பிடித்து ஜூரோங் ஏரி தோட்டத்தை நோக்கி ஓடினர். உடனடியாக பாதிக்கப்பட்ட அந்த நபருக்கு CPR சிகிச்சை நடத்தினர். மருத்துவமனை ஆம்புலன்ஸ் வரும்வரை அந்த நபருக்கு தங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்தனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர் சம்பவ இடத்திலேயே குணமானார்.

இதனையடுத்து 13 செப்டம்பர் 2021 அன்று, திரு. டாங் மற்றும் திரு. லியோங் ஆகியோர் விருது வழங்கும் விழாவில் 4-வது SCDF பிரிவின் தளபதி COL அந்தோனி டோவிடம் SCDF சமூக உயிர்காப்பாளர் விருதைப் பெற்றனர். இதில் திரு .Sng Hock Lin, தலைமை ActiveSG கலந்து கொண்டார். ஒரு உயிரைக் காப்பாற்றிய திரு டாங், திரு லியோங் மற்றும் நல்ல இதுபோன்ற போன்றஅனைவருக்கும் நன்றி.! என்றார் அவர்.

தக்க சமயத்தில் உதவிய அந்த வீரர்களுக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts