TamilSaaga

வாழ்த்துகள்! சிங்கப்பூரில் அரசு ஊழியர்களின் சம்பளம் 14% வரை உயர்வு! வெளிநாட்டு ஊழியர்கள் மீதும் கொஞ்சம் மனம் வைக்கலாம்!

சிங்கப்பூர்: இந்த ஆண்டு ஆகஸ்ட் 1 முதல் சுமார் 23,000 அரசு ஊழியர்களுக்கு 5 சதவீதம் முதல் 14 சதவீதம் வரை ஊதிய உயர்வு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது சேவை பிரிவு (PSD) நேற்று (ஜூன் 5) இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

முன்னதாக, சிவில் சர்வீஸ் ஊழியர்களுக்கான சம்பளம் கடைசியாக 2014-ல் மாற்றியமைக்கப்பட்டது, அப்போது நடுத்தர அரசு ஊழியர்களுக்கு சுமார் 5 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் தற்போது 16 அமைச்சகங்கள் மற்றும் 50 க்கும் மேற்பட்ட சட்டப்பூர்வ வாரியங்களில் சுமார் 153,000 பொது அதிகாரிகள் பணிபுரிகின்றனர். இவர்களில் சுமார் 87,000 பேர் அரசுப் பணியாளர்கள்.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் உங்கள் இந்திய பாஸ்போர்ட்டை புதுப்பிப்பது எப்படி? – இதுவரை இல்லாத ஒரு Complete Report

இந்நிலையில், நிர்வாக அதிகாரி, நிர்வாக ஆதரவு மற்றும் பெருநிறுவன ஆதரவு திட்டங்களில் உள்ள அரசு ஊழியர்கள் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை ஊதிய உயர்வுகளைப் பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், குறைந்த ஊதிய தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கான முத்தரப்பு பணிக்குழுவின் அறிவிப்பின் படி, அரசின் support scheme திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்கள் 6 சதவீதம் முதல் 14 சதவீதம் வரை ஊதிய உயர்வு பெற உள்ளார்கள்.

எனினும், வெளிநாட்டு ஊழியர்கள் உட்பட பொது ஊழியர்களின் அடிப்படை ஊதிய உயர்வு குறித்து அறிக்கையில் எந்த தகவலும் இடம் பெறவில்லை.

News Source: THE STRAITS TIMES

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts