TamilSaaga

சிங்கப்பூரில் முதியவர்களுக்கு ஆபத்து அதிகம்.. தடுப்பூசியை தவிர்க்காதீர் – அமைச்சர் ஓங் எச்சரிக்கை

சிங்கப்பூரில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத முதியவர்களுக்கு தொற்று பாதிப்பும் உயிரிழப்பு அபாயமும் அதிகம் என சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.

இதுவரையில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத வயதில் முதியவர்கள் விரைவாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் பேசியுள்ளார்.

சிங்கப்பூரில் கொரோன தொற்றை பொருத்தமட்டில் 0.2 சதவீதம் மக்களுக்கு தீவிர சிகிச்சை தேவைப்பட்டது என்றும் அதிலும் 0.1 சதவீத மக்கள் மரணம் அடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இதில் முக்கியமாக தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத மக்களுக்கு தீவிர சிகிச்சை மற்றும் மரண ஆபத்து அதிகமாக இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
இதில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத முதியவர்களுக்கு ஆபத்து அதிகம் என அவர் குறிப்பிட்டார்.

இதனால் முதியவர்கள் தேவையில்லாமல் வெளியே செல்வதை குறைத்துக்கொண்டு பாதுகாப்புக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Related posts