TamilSaaga

மெய்நிகர் தேசிய தின விழா.. “சிங்கப்பூர் புதிய பலம் பெற வேண்டும்” – அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன்

நேற்று சிங்கப்பூரில் மெய்நிகர் தேசிய தின விழா அனுசரிக்கப்பட்டு அதில் பல்வேறு அமைசர்களும் கலந்துகொண்டனர். வெளியுறவுத் துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணர் மெய்நிகர் தேசிய தின விழாவில் கலந்துகொண்டு அதனை தனது முகநூல் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

“இன்று காலை எங்கள் மெய்நிகர் தேசிய தின அனுசரிப்பு விழாவில் டாக்டர் மாலிகி ஒஸ்மான், சிம் ஆன் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சக உறவுகள் உடன் சிங்கப்பூரின் சுதந்திரத்தை கொண்டாடினோம்” என தெரிவித்துள்ளார்.

56 வருடங்களுக்கு முன்பு, சிங்கப்பூர் “முன்னோடி தலைமுறையை ஆதிக்கம் செலுத்தியது. இன்று அதே கொந்தளிப்பான நீரின் மத்தியில் புதிய உயரங்களை அளக்க அதே சிங்கப்பூர் புதிய பலத்தை பெற வேண்டும்.” என குறிப்பிட்டுள்ளார்.

விழாவில், சிங்கப்பூர் மற்றும் வெளிநாட்டு தூதரகங்களில் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சக அதிகாரிகளின் பங்களிப்பை அங்கீகரித்ததாக தெரிவித்தார். அவர்கள் சிங்கப்பூரர்களுக்கு உதவுவதற்காக கடமையை சிறப்பாக செய்கின்றனர் என குறிப்பிட்டார்.

“எங்கள் MFA அதிகாரிகளின் தைரியம் மற்றும் நெகிழ்ச்சிக்கு நான் குறிப்பாக பெருமைப்படுகிறேன்.” என பெருமிதம் கொண்டார்.

2021 MFA விருது வென்றவர்களுக்கு தன்னுடைய வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்துக்கொண்டார்.

Related posts