TamilSaaga

சிங்கப்பூரில் அலங்கோலமாய் மாறிப்போன “திருமண விருந்து”.. இரவோடு இரவாக மணப்பெண் வாழ்க்கையை சீரழித்த மாப்பிள்ளை தோழன்

திருமண நாளன்று இரவே ஒரு பெண்ணின் வாழ்க்கை சீர்கெட்டுப் போனால் எப்படி இருக்கும்? அப்படியொரு சம்பவம் சிங்கப்பூரில் அரங்கேறியுள்ளது.

சிங்கப்பூரின் downtown ஹோட்டலில் கடந்த 2016ம் ஆண்டு ஒரு தம்பதிக்கு திருமணம் நடைபெற்றது. அன்று இரவே அதே ஹோட்டலில் திருமணத்துக்கான இரவு விருந்தும் நடைபெற்றது.

இதில், மணமக்கள் மற்றும் மாப்பிள்ளை தோழன் என்று பலரும் டின்னர் சாப்பிட்டுள்ளனர். இரவு 11 மணிக்கு டின்னர் நிறைவடைந்த பிறகு மது பரிமாறப்பட்டது. மணமக்களும், அவர்களது தோழர்களும் மூச்சு முட்ட மது அருந்தியுள்ளனர்.

பிறகு நள்ளிரவு 1 மணிக்கு மணப்பெண் குளித்துவிட்டு தனது படுக்கையறைக்கு சென்றார். இங்கு மாப்பிள்ளையும் அவர்களது நண்பர்களும் தொடர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்பெண் கட்டிலில் இடது பக்கத்தில் தனது கணவர் படுக்க இடம் விட்டு, வலது பக்கத்தில் படுத்து உறங்கியுள்ளார். அதுவும் திருமண உடையிலேயே படுத்துள்ளார்.

அப்போது அப்பெண்ணின் ஆடையை விலக்கி யாரோ அவரது மார்பகங்களை தீண்டுவதை உணர்ந்துள்ளார். அதைத் தொடர்ந்து அப்பெண்ணுடன் அந்த நபர் பாலியல் உறவிலும் ஈடுபட்டிருக்கிறார். ஆனால், அந்த தீண்டல் தனது கணவனுடையது அல்ல என்பதை அந்த பெண்ணால் உணர முடிந்திருக்கிறது. அதேபோல், இருளில் அந்த நபரின் தலை தனது கணவரை விட பெரியதாக இருந்ததையும் அப்பெண் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க – தகதகவென எரிந்த இரண்டாம் உலகப்போர்.. நூற்றுக்கணக்கான மக்களை காப்பாற்றிய சிங்கப்பூர் “ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவில்” – பயபக்தியோடு வணங்கும் லிட்டில் இந்தியா மக்கள்

பிறகு, எல்லாம் முடிந்த பிறகு அப்பெண் எழுந்து வந்த பார்த்த போது, அவரது கணவர் ஹாலில் இருந்த சோஃபாவில் உறங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதன்பிறகு அவர் போலீசில் புகார் செய்ய, சம்பந்தப்பட்ட நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அந்த நபர் தனது மனைவி என்று நினைத்து தவறுதலாக அப்பெண்ணை தொட்டுவிட்டதாக கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, அவர் அப்பெண்ணின் மார்பகங்களில் கை வைத்த போது, அவரது முனகல் சப்தம் தன் மனைவியின் முனகல் சப்தம் போல் இல்லாததால், அப்போதே படுக்கையில் இருந்து எழுந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

எனினும், சிங்கை நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் மாப்பிள்ளையின் தோழன் தான் குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டது.

அந்த நபருக்கு வரும் ஜூலை 21ம் தேதி தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

பாலியல் துன்புறுத்தலுக்கு, ஒரு குற்றவாளிக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்படலாம்.

ஒரு நபரை அனுமதியின்றி பாலியல் ரீதியாக ஊடுருவியதற்காக, ஒரு குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் அல்லது பிரம்பு விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில், மற்றொரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில், இப்போது அந்த தம்பதிகள் இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டனர். எனினும், அன்றைய இரவு குற்றம் இழைத்த மாப்பிள்ளை தோழருக்கு சுடச்சுட தண்டனை ரெடியாகிக் கொண்டிருக்கிறது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts