இந்த செய்தியை படிக்கும் போதே, “எங்க தலைக்கு எவ்ளோ தில்லு பார்த்தியா!” என்று சொல்ல வைத்துவிடுகிறார் இந்த மாமனிதர்.
ஆம் சிங்கப்பூரில் வசிக்கும் Chun Yi என்ற பெண், சமீபத்தில் பேருந்தில் சென்றிருக்கிறார். டபுள்-டெக்கர் பேருந்தான அதில், மேலே (Upper deck-ல்) அவர் பயணித்து இருக்கிறார்.
இதுகுறித்து அவரே தனது பேஸ்புக் பக்கத்தில் முழு தகவலையும் பதிவிட்டிருக்கிறார். அதில், “நான் கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் அந்த பேருந்தில் தூங்கியிருப்பேன். எனக்கு எதிரில் ஒரு நபர் நின்று கொண்டிருந்தார். நான் தூங்க ஆரம்பித்த போது, ஏதோ பேண்ட்டின் ஜிப்-ஐ திறந்து திறந்து மூடுவது போன்று சப்தம் கேட்டது.
அப்போது அந்த நபர், ஒரு பையை தனது தோள்பட்டையில் மாட்டி, அதை முன்பக்கம் தொங்க விட்டிருந்தார். அவர் அந்த பையின் ஜிப்பை தான் ஏதோ திறந்து மூடிக் கொண்டிருக்கிறார் என்று நினைத்தேன். ஒருக்கட்டத்தில் அந்த சப்தம் என்னை மிகவும் எரிச்சல் ஆகியது.
மீண்டும் மீண்டும் அந்த ஜிப் திறக்கும் சப்தம் எனக்கு கேட்க, இம்முறை கண் விழித்து அவரது முகத்தைப் பார்த்தேன். அப்போது அவர் ஏதோ முனகிக் கொண்டே பைக்கு இடையில் ஏதோ செய்து கொண்டிருந்தார். கொஞ்சம் கொஞ்சமாக அவரது முனகல் சப்தம் அதிகமாகிக் கொண்டே போனது. ஒருக்கட்டத்தில் அவர் தன்னை மறந்து மிக சப்தமாக முனக ஆரம்பித்துவிட்டார்.
அப்போது தான் அவர் என்னை பார்த்து சுய இன்பத்தில் ஈடுபடுவது தெரிய வந்தது. இதில் ஆச்சர்யம் என்னவெனில், அந்த நபரின் செயலை பேருந்தில் இருந்த மற்றவர்கள் எவரும் கவனிக்கவில்லை. உடனடியாக நான் பேருந்தில் கீழ் பக்கம் இறங்கி வந்துவிட்டேன். நான் முழித்துவிட்டதை பார்த்த அந்த நபர், தனது பேண்ட் ஜிப்பை சரி செய்துவிட்டு, அடுத்த ஸ்டாப்பில் இறங்கி சென்றுவிட்டார்” என்று கூறியுள்ளார்.
அந்த பெண் அவர் சுய இன்பத்தில் ஈடுபட்ட வீடியோவை எடுக்கவில்லை. ஆனால், அவரது புகைப்படங்களையும், சில வீடியோக்களையும் எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட, இப்போது சிங்கப்பூர் போலீசார் இந்த படங்களையும், வீடியோக்களையும் வைத்து விசாரித்து வருகின்றனர்.