TamilSaaga

“உணவகம் செல்ல போலி தடுப்பூசி சான்றிதழ்” : சிங்கப்பூரில் 30 வயது நபர் கைது – 4 ஆண்டு சிறைக்கு வாய்ப்பு

சிங்கப்பூரில், 30 வயதான சீனப் பிரஜை ஜாங் ஷாபெங், கோவிட் -19க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்பட்டதாகக் காட்ட ஒரு மருத்துவரின் கடிதத்தை போலியாக தயாரித்ததாக இன்று செப்டம்பர் 15 அன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் போலீஸ் படையின் (SPF) செய்திக்குறிப்பின்படி, கடந்த செப்டம்பர் 1ம் தேதி நடந்த சம்பவத்தில், சந்தேகிக்கப்படும் நபர் ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள உணவு மற்றும் பானம் (F&B) நிறுவனத்தில் உணவருந்துவதற்காக போலி மெமோராண்டத்தின் டிஜிட்டல் நகலை தயாரித்ததாகக் கூறப்படுகிறது.

அந்த ஸ்தாபனத்தின் ஊழியர்கள் பின்னர் அவரது குறிப்பைச் சரிபார்த்து, அவரை வெளியேறச் சொல்வதற்கு முன், அது போலியானதாக இருக்கலாம் என்று சந்தேகித்துள்ளார். பின்னர் இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. டாங்ளின் போலீஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் சந்தேகநபரின் பின்தொடர்தல் விசாரணையின் மூலம் அடையாளம் கண்டு, அவரை செப்டம்பர் 14 அன்று கைது செய்தனர்.

அவர் மீது குற்றவியல் சட்டம் பிரிவு 465ன் கீழ், செப்டம்பர் 15ல் போலி மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றத்திற்காக, அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

Related posts