மலேசியாவின் ஒன்பதாவது பிரதமராக பதவியேற்ற திரு. இஸ்மாயில் சப்ரி யாகோப்பை இன்று ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 22) நமது பிரதமர் லீ சியன் லூங் தொலைபேசி மூலம் அழைத்து வாழ்த்தினார். மேலும் புதிதாக பதவியேற்ற தனது சகாவை சிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ சுற்றுப்பயணத்திற்கு அழைப்பும் விடுத்துள்ளார் நமது பிரதமர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை திரு லீ அளித்த தொலைபேசி அழைப்பில், இரு தலைவர்களும் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவின் “நீண்ட, ஆழமான மற்றும் பரந்த உறவுகளை” உறுதிப்படுத்தினர் என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் (MFA) வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. அழைப்பின் போது, இரு பிரதமர்களும் நெருக்கமாக இணைந்து பணியாற்றவும், இந்த தொற்றுநோய் போன்ற சவால்களை சமாளிப்பது குறித்தும் பேசினார் என்று எம்எஃப்ஏ மேலும் கூறியது.
திரு. இஸ்மாயில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த கணிசமாக தன்னுடைய பங்கை அளித்தார் என்று திரு லீ குறிப்பிட்டார். “துணைப் பிரதமர் மற்றும் மூத்த அமைச்சராக நீங்கள் நியமனம் செய்யப்படுவதற்கு முன்பு பல அமைச்சகங்களுக்கு உதவியது உட்பட பொதுச் சேவை மற்றும் அரசாங்கத்தில் உங்கள் அனுபவத்தின் செல்வத்தால், மலேசியா பிரதமராக உங்கள் தலைமையின் கீழ் தொடர்ந்து வளரும் என்று நான் நம்புகிறேன்” என்று திரு லீ எழுதினார்.
திரு. இஸ்மாயில் சப்ரி மலேசியாவின் பிரதமராக நேற்று சனிக்கிழமை பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.