TamilSaaga

சிங்கப்பூரில் $8.2 மில்லியன் பண மோசடி – சந்தேகத்தின் பெயரில் 311 பேரிடம் விசாரணை

ஜீன் 5ம் தேதியிலிருந்து 20ம் தேதி வரை வர்த்தக விவகார பிரிவு அதிகாரிகள், 7 காவல்துறை அதிகாரிகள் உட்பட அதிகாரிகள் குழு சுமார் 2 வாரம் அமலாக்க சோதனையில் ஈடுபட்டார்கள்.

அதில் சுமார் $8.2 மில்லியன் அளவிலான பண மோசடியில் 866 பேர் மீது ஈடுபட்டு இருக்க வாய்ப்புள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

தற்போது இந்த மோசடியில் சுமார் 311 பேரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை துவங்கப்பட உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அதில் 219 பேர் ஆண்கள் 92 பேர் பெண்கள்.

பண மோசடி, இணையத்தில் காதல் பெயரில் மோசடி, கடன் மற்றும் சூதாட்ட மோசடி, இணைய வர்த்தக மோசடி மற்றும் அரசு அதிகாரியாக நடித்து மோசடி என பல்வேறு தொடர்பின் கோணத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

Related posts