TamilSaaga

“குறைந்த கார்பன் மூலங்களிலிருந்து ஆற்றல்” : 2035ம் ஆண்டை இலக்காக கொண்டு செயல்படும் சிங்கப்பூர்

சிங்கப்பூர் வரும் 2035-க்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிலையங்கள் போன்ற குறைந்த கார்பன் மூலங்களிலிருந்து சுமார் 30 சதவீத மின்சாரத்தை இறக்குமதி செய்வதன் மூலம் சிங்கப்பூர் தனது மின் துறையின் கார்பன் பயன்பாட்டை மேலும் குறைக்க திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது, சூரிய சக்தியைத் தவிர மற்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விருப்பங்களுக்கான அணுகல் இல்லாத நமது குடியரசை, மற்ற நாடுகளில் உள்ளது போல காற்றாலை மற்றும் நீர் மின்சாரம் போன்ற ஆதாரங்களைத் தொடங்க வழிவகுக்கும்.

வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் கான் கிம் யோங் இன்று திங்கள்கிழமை (அக்டோபர் 25) சிங்கப்பூர் சர்வதேச எரிசக்தி வாரத்தின் தொடக்க விழாவில் பேசியபோது “குறைந்த அளவிலான கார்பன் ஆற்றலை இறக்குமதி செய்வது சிங்கப்பூரின் ஆற்றல் மாற்றத்தில் ஒரு முக்கிய கருவியாக இருக்கும்” என்றார். உலக வெப்பமயமாதலில் கிட்டத்தட்ட கால் பங்கை “மின் துறை” தனது கணக்கில் கொண்டுள்ளதால், கார்பனேற்றம் இல்லாத மின் உற்பத்தியை செய்வது உலகளாவிய காலநிலை மாற்ற முயற்சியின் மிகப்பெரிய தூண்டுகோலாக இருக்கும் திரு கேன் கூறினார்.

நிலக்கரி மற்றும் பிற புதைபடிவ எரிபொருட்களின் மீதான நம்பிக்கையை குறைத்து, மேலும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை வளர்ப்பதற்கு பல நாடுகள் ஏற்கனவே தங்கள் மின் துறையை மாற்றுவதாக உறுதியளித்துள்ளன என்றார் அவர்.

நிலக்கரி அல்லது பிற எரிபொருள்களுடன் ஒப்பிடும்போது இயற்கையாக கிடைக்கும் எரிவாயுக்கள் குறைந்த கார்பன் டை ஆக்சைடை உற்பத்தி செய்வதால், பல நாடுகள் இப்போது தங்கள் கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்க இந்த எரிபொருளுக்கு மாறுகின்றன. இது எரிவாயு தேவையை மேலும் அதிகரிக்கிறது. ஒரு நாடு தனது பாரம்பரிய எரிசக்தி ஆதாரங்களின் பெரும்பகுதியை குறுகிய காலத்தில் புதியதாக மாற்றும் போது, ​​எதிர்பாராத பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை அபாயங்கள் ஏற்படலாம் என்று திரு கான் கூறினார்.

Related posts