TamilSaaga

அன்று கல்லூரி வாசலில் சாப்பாடு விற்றவர்.. இன்று சிங்கப்பூருக்கே அதிபர்! – ஒட்டுமொத்த சிங்கையின் அசைக்க முடியாத “அடையாளம்” ஹலீமா யாக்கோப்

ஒரு காலத்தில் வீட்டு சமையலறை மட்டும் தான் பெண்ணுக்கு உகந்த இடமென்று கூறினார்கள். சிங்கப்பூர், இந்தியா என்று ஆசிய நாடுகள் மட்டுமின்றி உலக அளவில் பரவலாக பெண் அடிமைத்தனம் இருந்து வந்துள்ளது.

ஆனால் இன்று காலம் மாறிப்போச்சு.. ஒரு உடலை கருவில் தாங்கி உயிர் கொடுக்கும் உன்னத பெண்கள் இன்று உலகை ஆள்கின்றனர். அந்த வகையில் துயரங்கள் பல கடந்து இன்று மாபெரும் பெண்ணாக நமது சிங்கப்பூர் மக்களை காத்துவரும் நமது அதிபர் ஹலீமா யாக்கோப் அவர்களை பற்றித்தான் காணவுள்ளோம்.

ஹலீமா யாக்கோப், ஒரு இந்திய இஸ்லாமிய குடும்பத்தை சேர்த்தவர், ஆம் அவருடைய தந்தை இந்திய வம்சாவளியில் இருந்து வந்தவர் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. சிங்கையின் மகத்தான அதிபரான ஹலீமா சிங்கப்பூர் Queen’s சாலையில் உள்ள தனது இல்லத்தில் 23 ஆகஸ்ட் 1953ம் ஆண்டு பிறந்தார்.

இளமைக்காலம்

ஹலிமா 8ம் வகுப்பு படித்து வந்த நிலையில் அவரது தந்தை காலமானார், இறுதி வரை அவர் ஒரு Watchman பணியில் இருந்து தான் குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தையின் இறப்புக்கு பிறகு ஹலிமாவின் தாய் தான் அவரையும் அவரது 4 உடன்பிறந்தவர்களையும் காப்பாற்ற போராடியுள்ளார்.

மேலும் படிக்க – “ஊருக்கு மாதம் 1 லட்சம் வரை அனுப்பலாம்” – இந்திய ஊழியர்களுக்கு சிங்கப்பூர் மேலாண்மை மேம்பாட்டு வாரியத்தின் “சூப்பர்” அறிவிப்பு

பள்ளிக்கு சென்று வந்தபிறகு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் அன்றைய சிங்கப்பூரின் Singapore Polytechnic (தற்போதைய Bestway Building) வாசலில் தாய் செய்துகொடுக்கும் “Nasi Padang”களை விற்று குடும்பத்தை காப்பாற்றியுள்ளார். அது என்ன Nasi Padang? இந்தோனேசியாவின் Padang நகரத்தில் தயாரிக்கப்படும் அரிசியைத் தான் இவ்வாறு கூறுகின்றனர். இந்த சாதத்துடன் பல்வேரு வகையான கூட்டுப், பொரியல் வைத்து தரப்படும் உணவு தான் Nasi Padang.

கல்வித்தகுதி

படிப்பு மட்டுமே தங்கள் வறுமையை போக்கும் என்று மனதில் ஒரு உறுதி பிறக்க, ஏழ்மையான குடும்ப சூழலிலும் தனது படிப்பை தொடர்ந்தார் ஹலீமா. சிங்கப்பூர் சீனா பெண்கள் பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்து பின் 1978ம் ஆண்டு சட்டபடிப்பில் தனது இளங்கலைப் பட்டத்தை பெற்றார். அதன் பிறகு முதுகலை படத்தையும் முடித்து இறுதியில் கடந்த 2016ம் ஆண்டு டாக்டர் பட்டமும் பெற்றார்.

அரசியல் வாழ்க்கை

அரசியல் மீது ஆர்வம் கொண்ட ஹலிமா தேசிய தொழிற்சங்க காங்கிரஸில் சட்ட அதிகாரியாகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 1992ல் அதன் சட்ட சேவைகள் துறையின் இயக்குநரானார். அதன் பிறகு 1999ம் ஆண்டு அவர் சிங்கப்பூர் தொழிலாளர் ஆய்வுக் கழகத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

ஹலிமா 2001ல் ஜூரோங் குழு பிரதிநிதித்துவத் தொகுதிக்கு (GRC) நாடாளுமன்ற உறுப்பினராக (MP) தேர்ந்தெடுக்கப்பட்டபோது தான் முதன்முதலில் அரசியலில் கால்பதித்தார். மேலும் 2011ம் ஆண்டு பொதுத் தேர்தலைத் தொடர்ந்து, சமூக மேம்பாடு, இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தில் மாநில அமைச்சராக ஹலிமா நியமிக்கப்பட்டார்.

மேலும் நவம்பர் 2012ல் அமைச்சரவை மாற்றத்தைத் தொடர்ந்து, அவர் சமூக மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சகத்தில் மாநில அமைச்சரானார். அவர் ஜூரோங் டவுன் கவுன்சிலின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

சிங்கப்பூரின் முதல் பெண் அதிபர்

இதுவரை சிங்கப்பூரை 7 அதிபர்கள் ஆட்சி செய்துள்ள நிலையில் ஹலீமா தான் சிங்கப்பூரின் 8வது மற்றும் சிங்கப்பூர் வரலாற்றின் முதல் பெண் அதிபர் ஆவார்.

மேலும் படிக்க – கத்தார் நாட்டில் Food Delivery பணிக்கு ஆட்கள் தேவை.. 70,000 முதல் 1.20 லட்சம் வரை சம்பளம் – தஞ்சையில் 30.05.2022 அன்று நேர்முகத் தேர்வு

விருதுகள்

ஹலீமா யாக்கோப் அவர்களுக்கு கடந்த 2001ம் ஆண்டு Berita Harian Achiever of the Year Award வழங்கி சிறப்பிக்கப்பட்டது. மேலும் “Her World Woman of the Year Award” என்ற விருது 2003ம் ஆண்டும் AWARE Heroine Award என்ற விருது 2011ம் ஆண்டும் வழங்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் Singapore Council of Women’s Organisation’s வழங்கும் Singapore Women’s Hall of Fameல் கடந்த 2014ம் ஆண்டு ஹலீமா இணைக்கப்பட்டார்.

சொந்த வாழ்க்கை

1980ம் ஆண்டு Mohammed Abdullah Alhabshee என்பவரை திருமணம் செய்துகொண்டார், தற்போது அவருக்கு 5 குழந்தைகள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி தனது வறுமை காலத்தில் டீ விற்று தன் வாழ்க்கையை நடத்தியவர் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். மோடியே நான் டீ விற்றிருக்கிறேன் என்று கூறியும் இருக்கிறார். ஒரு காலத்தில் டீ விற்றவர் இந்தியாவின் பிரதமர் ஆனது போன்று, ஒரு காலத்தில் சாப்பாடு விற்ற ஹலீமா யாக்கோப் இன்று சிங்கப்பூரின் அதிபராக சிறப்பாக பணியாற்றி வருவது நம் சிங்கையின் பெருமைக்கான அடையாளம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts