TamilSaaga

சிங்கப்பூரில் காணாமல் போன சிறுமி.. தகவல் தெரிந்தால் சொல்லவும் – காவல்துறை வேண்டுகோள்

சிங்கப்பூரில் காணாமல் போன ஒரு சிறுமி பற்றிய தகவல்கள் ஏதேனு தெரிந்தால் தெரிவிக்கும்படி காவல்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 31) முதல் காணாமல் போன ஒரு 14 வயது சிறுமியின் இருப்பிடம் குறித்து யாருக்காவது தகவல் தெரிந்தால் அதனை தருமாறு காவல்துறை பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Jaslyn Ng Jing Feng என்ற அந்த சிறுமி கடைசியாக அக்டோபர் 31 அன்று சிங்கப்பூர் செங்காங்கில் உள்ள பிளாக் 187B ரிவர்வேல் டிரைவைச் பகுதியை சுற்றி காணப்பட்டார் என்று நேற்று வியாழக்கிழமை (நவம்பர் 4) காவல்துறை தனது செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

இது குறித்த தகவல்களை அறிவிக்க ஒரு தொலைபேசி எண்ணையும் காவல்துறை தெரிவித்தது.

சிறுமி பற்றிய தகவல் தெரிந்த எவரும் 1800-255-0000 என்ற பொலிஸ் ஹாட்லைனை நம்பரை அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையதளம் வாயிலாகவும் தகவல்களை தெரிவிக்கலாம். www.police.gov.sg/iwitness என்ற இணையதளத்தில் தகவல் பற்றிய் அறிக்கை சமர்ப்பிக்கலாம் என காவல்துறை அறிவித்துள்ளது.

தகவல்களை யார் அளித்தாலும் அவை அனைத்தும் மற்றும் தகவல் கொடுப்பவர்கள் விவரங்களும் ரகசியமாக வைக்கப்படும் என காவல்துறை உறுதிபட தெரிவித்தனர்.

Related posts