TamilSaaga

“சிங்கப்பூர் Pasir Ris பகுதியில் சாலை விபத்து” : மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஓட்டுநருக்கு நேர்ந்த பரிதாபம்

சிங்கப்பூரில் 58 வயதான லாரி டிரைவர் ஒரு நேற்று திங்கள்கிழமை (அக்டோபர் 18) பாசிர் ரிஸில் நடந்த சாலை விபத்தில் ஒன்றில் சிக்கி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிசிர் ரிஸ் டிரைவ் 10, பிளாக் 645க்கு அருகில் நேற்று இரவு சுமார் 8.30 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படை (SCDF) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த SCDF மற்றும் சிங்கப்பூர் காவல்துறையினர், அடிபட்ட அந்த ஓட்டுனரை மீட்டு உடனடியாக சாங்கி பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே டிரைவர் மயக்கமடைந்தார், பின்னர் அவர் இறந்துவிட்டார் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகின்றது.

விபத்தில் சிக்கிய அந்த வாகனம் பார்ப்பதற்கு ஊழியர்களை அழைத்து செல்லும் வாகனம் போல உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அந்த வாகனம் எங்கு சென்ற வாகனம், ஓட்டுநர் யார் என்பது போன்ற தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts