TamilSaaga

MOMவுடன் இணைந்து செயல்படும் Dettol நிறுவனம் : மகிழ்ச்சியில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

சிங்கப்பூரில் கடந்த ஜூன் 2021 முதல், மனிதவள அமைச்சகத்துக்கு கீழ் இயங்கும் ACE நிறுவனம் NEA சிங்கப்பூர் மற்றும் டெட்டால் சிங்கப்பூர் ஆகியவற்றுடன் கூட்டு சேர்ந்து 300,000 பாட்டில் டெட்டால் கை சுத்திகரிப்பான்களை புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தடுப்பூசி மையங்களில் விநியோகிக்கிறது.

இந்த விநியோகப் முயற்சி வரும் ஆகஸ்ட் 2021 வரை தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடையே தனிப்பட்ட சுகாதாரத்தை ஊக்குவிப்பதற்கான தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என்று கூறபடுகிறது.

சிங்கப்பூரில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பல சலுகைகளை அரசு அறிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மனிதவள அமைச்சகத்தோடு இணைந்து டெட்டால் நிறுவனம் செய்து வரும் இந்த காரியம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வருகின்றது.

சிங்கப்பூரில் வட்டார அளவில் பிற நாட்டு தொழிலார்களுக்கு புதிதாக 6 மருத்துவமனைகள் சிங்கப்பூர் அரசு தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts