TamilSaaga

நீரில் மூழ்கி இறந்த மியான்மர் நபர்.. சிங்கப்பூர் நீர்ப்பகுதியில் சடலம் மீட்பு – காவல்துறை விசாரனை

சிங்கப்பூரில் கடந்த புதன்கிழமை காணாமல் போன ஒருவரின் சடலமானது லீம் சூ காங் நீர்ப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே புதன்கிழமை அன்று நீரில் மூழ்கித அவரை காணவில்லை என காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. இந்த சூழலில் மியான்மரை சேர்ந்தவராக அறியப்படும் அந்த 50 வயது நபரின் சடலம் நேற்று கிடைத்துள்ளது.

காவல்துறையின் ஆரம்ப கட்ட விசாரணையில் அவரது மரணத்தில் எந்த வித குற்றசம்பவங்களும் இருப்பதாக தெரியவில்லை என கூறப்பட்டுள்ளது.

லீம் சூ காங் நீர்ப்பகுதில் நேற்று (அக்டோபர்.28) காலை 7.25 மணியளவில் அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது.

ஆரம்ப கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில் இது தோடர்பான விசாரணைகள் மேலும் நடைபெறும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

Related posts