இந்தியப் பெருங்கடல் பகுதியில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த சரக்கு கப்பல் ஒன்று நேற்று சிங்கப்பூருக்கு இழுத்து வரப்பட்டுள்ளதாக இலங்கையின் கடற்படை அதிகாரப்பூர்வ தகவல்களை தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று தீப்பற்றிய எரிந்து கொண்டிருந்த சரக்கு கப்பல் இந்திய பெருங்கடல் பகுதியில் இருந்தபோது இந்திய கடலோர காவல் படையினர் அந்த தீயை அணைக்க முயன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவில் உள்ள போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 700 கிலோ மீட்டர் தொலைவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த தீ சம்பவத்தில் கப்பலில் பணிபுரிந்த ஊழியர் ஒருவரை காணவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் அவரை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டிருக்கின்றனர். சிங்கப்பூரை நோக்கி அந்த கப்பல் கொழும்பில் இருந்து புறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது எரிந்த அந்த கப்பல் சிங்கப்பூருக்கு இழுத்துவரப்பட்டுள்ளது.