TamilSaaga

“தீவில் தகுதியான அனைத்து குடும்பங்களுக்கும் ART கிட் வழங்கிவிட்டோம்” : சிங் போஸ்ட் அறிவிப்பு

சிங்கப்பூரில் குடும்பங்களுக்கு இலவச பெருந்தொற்று ஆன்டிஜென் ரேபிட் டெஸ்ட் (ART) கருவிகளின் விநியோகம் செய்யும் பணி நிறைவடைந்துள்ளதாக சிங்கப்பூர் போஸ்ட் இன்று செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 28) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. சோதனை முயற்சிகளைத் துரிதப்படுத்தும் சிங்கப்பூரின் வியூகத்தின் ஒரு பகுதியாக, ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 27 வரை ஒவ்வொரு வீட்டிலும் ஆறு DIY டெஸ்ட் கிட்களின் தொகுப்பை ஒவ்வொரு குடும்பமும் பெறும் என்று அதிகாரிகள் கடந்த மாதம் அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல நாட்டில் சிலர் தங்களுக்கு இந்த கிட் கிடைக்கவில்லை என்று கூறிய நிலையில் அதுகுறித்து எழுந்த கேள்விக்கு பதிலளித்த சிங்போஸ்ட் செய்தித் தொடர்பாளர், “அனைத்து தகுதியுள்ள வீடுகளுக்கும் ART கிட் விநியோகம் கடந்த செப்டம்பர் 27ம் தேதியன்று திட்டமிட்டபடி நிறைவடைந்தது என்றார். “ART விநியோகம் எங்கள் கண்காணிக்கப்பட்ட தொகுப்பு சேவையைப் பயன்படுத்துவதால், எங்கள் தபால்காரர்கள் டெலிவரி செய்ததற்கான சான்றாக, கிட்ஸை வெற்றிகரமாக லெட்டர்பாக்ஸில் வைத்த பிறகு புகைப்படங்களை எடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.

அதேசமயம் இந்த கிட்களை பெறாத குடும்பத்தினர் சிங்க்போஸ்டின் ஹாட்லைனை 1605 என்ற எண்ணில் அல்லது talk2us@singpost.com என்ற மின்னஞ்சலுக்கு அழைக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். இந்த கிட்கள் மக்களிடம் நேரடியாக அவர்களது தபால்பெட்டிக்கே வழங்கப்படும் என்று சிங்க்போஸ்ட் முன்பு கூறியது, குடியிருப்பாளர்கள் சிங்க்போஸ்ட் பயன்பாட்டின் மூலம் தங்கள் விநியோகத்தின் புதுப்பிப்புகளைச் சரிபார்க்கலாம்.

சிங்கப்பூர் படிப்படியாக ஒரு பெருந்தொற்று நெகிழ்திறன் கொண்ட நாடாக மாறும்போது, ​​தொற்றுநோயை நிர்வகிக்க சமூகம் பெருகிய அளவில் முக்கிய பங்கு வகிக்கும்,” என்று சுகாதார அமைச்சகம் (MOH) சோதனை கருவிகளின் விநியோகத்தை அறிவிக்கும் போது கூறியது குறிப்பிடத்தக்கது. இதில் ஒரு முக்கிய அம்சம், சுயபரிசோதனை மற்றும் ஒருவரின் ஆரோக்கியத்தை கண்காணிப்பதன் மூலம் தனிப்பட்ட பொறுப்பை செயல்படுத்துவதாக அமைச்சகம் மேலும் கூறியுள்ளது.

Related posts