TamilSaaga

சிங்கப்பூரில் தொற்றுக்கு 82 வயது முதியவர் பலி – 47ஆக உயர்ந்த மொத்த பலி எண்ணிக்கை

சிங்கப்பூரில் 82 வயதான சிங்கப்பூரர் ஒருவர் நேற்று முன்தினம் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 19) அன்று பெருந்தொற்று காரணங்களால் இறந்துவிட்டார் என்று சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் (MOH) நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. சிங்கப்பூரின் பெருந்தொற்று வழக்கு 67178 என அடையாளம் காணப்பட்ட அவர், கடந்த ஜூலை 30ம் தேதி அன்று சில அறிகுறிகள் தெரிந்த நிலையில் தொற்றுக்கு சாதகமாக கண்டறியப்பட்டுள்ளார்.

அதன் பிறகு அந்த 82வயது முதியவர் அலெக்ஸாண்ட்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொற்றுக்கான தடுப்பூசி போடவில்லை இஸ்கிமிக் இதய நோய், மாரடைப்பு, சிஸ்டிக் சிறுநீரக நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றின் வரலாறு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஒரே மாதத்தில் சிங்கப்பூரின் 10 வது தொற்று இறப்பு அந்த நபர் என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூரில் மொத்தம் 47 பேர் இதுவரை கொரோனா வைரஸால் இறந்துள்ளனர்.

சிங்கப்பூரில் நேற்று வெள்ளிக்கிழமை நண்பகல் நிலவரப்படி 36 புதிய உள்ளூர் வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் முந்தைய வழக்குகளுடன் எந்த தொடர்பும் இல்லாத 14 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் திரும்பிய நான்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts