TamilSaaga

“சிங்கப்பூரில் Dormitoryயில் அதிகரிக்கும் தொற்று எண்ணிக்கை?” : நேற்று ஒரே நாளில் 620 பேருக்கு பாதிப்பு

சிங்கப்பூரில் நேற்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 15) மதியம் நிலவரப்படி 3,445 புதிய பெருந்தொற்று வழக்குகள் பதிவாகியுள்ளன. வைரஸால் ஏற்பட்ட சிக்கல்களால் மேலும் எட்டு பேர் உயிரிழந்தனர். 61 முதல் 89 வயதுக்குட்பட்ட ஏழு ஆண்கள் மற்றும் ஒரு பெண் உயிரிழந்துள்ளனர் என்று MOH தெரிவித்துள்ளது. அவர்களில் ஐந்து பேருக்கு தடுப்பூசி போடப்படவில்லை, மூன்று பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பலியானவர்களில் ஏழு பேர் பல்வேறு அடிப்படை மருத்துவ நிலைகளைக் கொண்டிருந்தனர், அதே நேரத்தில் தடுப்பூசி போடாத ஒருவருக்கு எந்தவிதமான மருத்தவ நிலைமைகளும் இல்லையென்று தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை நாட்டில் தொற்றுக்கு 215 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய வழக்குகளில், 3,443 உள்நாட்டில் பரவுகிறது, இதில் சமூகத்தில் 2,823 நோய்த்தொற்றுகள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர் தங்குமிடங்களில் 620 உள்ளன. மேலும் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்த 2 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது என்று நேற்று இரவு 11 மணியளவில் ஊடங்களுக்கு MOH தெரிவித்தது. தற்போது வரை சிங்கப்பூரில் தொற்று பதித்தவர்கள் எண்ணிக்கை 141,772 ஆக உள்ளது.

“செயலில் உள்ள மூன்று கிளஸ்டர்களை” உன்னிப்பாகக் கண்காணிப்பதாக ” MOH தெரிவித்துள்ளது. இந்த பட்டியலில் புவாங்காக் வியூவில் உள்ள ஒரு மூத்த பராமரிப்பு மையம் அடங்கும். ECON மருத்துவ மையம் மற்றும் நர்சிங் ஹோம் ஆகியவற்றில் மொத்தம் 55 வழக்குகள் உள்ளன, 11 வெள்ளிக்கிழமை பதிவாகியுள்ளன. வழக்குகளில் ஒன்று ஊழியர், மீதமுள்ள 54 பேர் குடியிருப்பாளர்கள்.

Related posts