TamilSaaga

சிங்கப்பூரில் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 52 வயது பெண்மணி – 28 வயது இளைஞர் கைது

சிங்கப்பூரில் நேற்று ஆகஸ்ட் 20ம் தேதி பாலியல் பலாத்கார வழக்கில் ஈடுபட்டதாக 28 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் இன்று ஆகஸ்ட் 21ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

போலீசார் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் டோ பயோவில் உள்ள ஒரு கட்டிடத்தில் அடையாளம் தெரியாத ஒரு நபரால் 52 வயது பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை அறிந்து அந்த இடத்திற்கு போலீசார் விரைந்ததாகவும். சம்பவ இடத்திற்கு போலீசார் வரும்போது அந்த நபர் தப்பிவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சம்பவத்தின் போது அந்த பெண் லேசான காயமடைந்தார் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.

இந்நிலையில் சுமார் 10 மணி நேரம் கழித்து, அந்த நபர் ஆங் மோ கியோவில் உள்ள ஒரு குடியிருப்பு பிரிவில் போலீஸ் கேமராக்கள் மற்றும் சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் கைது செய்யப்பட்டார். டாங்ளின் காவல் பிரிவு, குற்றப் புலனாய்வுத் துறை, பொதுப் போக்குவரத்துப் பாதுகாப்பு மற்றும் காவல் செயல்பாட்டு கட்டளை மையத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் இந்த வழக்கில் இணைந்து பணியாற்றினர்.

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 375 (3) (a) (i) ன் கீழ் தண்டிக்கப்படக்கூடிய 375 (1A) (a) பிரிவின் கீழ் கடுமையான பாலியல் பலாத்காரம் செய்ததாக நீதிமன்றத்தில் அந்த நபர் குற்றம்சாட்டப்பட்டுள்ளார். குற்றம் நிரூபிக்கப்பட்டால், மோசமான பாலியல் பலாத்கார குற்றத்திற்கு எட்டு முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும், மேலும் 12 பிரம்படிகளுக்கு குறையாமல் வழங்கப்படும்.

Related posts